×

குளித்தலை அருகே பாறைப்பட்டியில் வாழைக்காய் வியாபாரியிடம் ₹60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை, ஏப். 3: குளித்தலை அடுத்த பாறைப்பட்டி பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வட்டார புள்ளியக ஆய்வாளர் சிவகுமார் (33) நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது வாழைத்தார் வெட்டுவதற்காக வாழைக்காய் வியாபாரி சுரேஷ் ரூ.60,000 கொண்டு சென்றது தெரியவந்தது .உரிய ஆவணங்கள் இன்றி 60 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவகுமார் பணத்தை பறிமுதல் செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த மேல பட்டியை சேர்ந்த சுரேஷ், பாறைப்பட்டி பொன்னர், கோப்பு தங்கவேல், எஸ்.புதுக்கோட்டை பிரபு, முதலைப்பட்டி அய்யர் உள்ளிட்ட 20 ஆண்கள், 10 பெண்கள் மொத்தம் 35 பேர் பாறைப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவகுமார் கொடுத்த புகார் புகாரின் பேரில் குளித்தலை போலீசார் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்ற

The post குளித்தலை அருகே பாறைப்பட்டியில் வாழைக்காய் வியாபாரியிடம் ₹60 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Bhikhapatti ,Kulithalai ,District Statistics Inspector ,Sivakumar ,Kulitalai ,Dinakaran ,
× RELATED கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!